வாஸ்து ஒரு சிந்தனை
வாஸ்து புருஷன்-புராணக் கதை.
வாஸ்து புருஷன் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் என்று நாம் பஞ்சாங்கத்தில் பார்த்திருக்கிறோம். இந்த வாஸ்து புருஷன் யார் என்ற கேள்வி பலருக்கு உண்டாகலாம். இதற்கு ஒரு புராணக் கதை.
அண்டகாசுரன் தன் தவத்தினாலும் அதனால் பெற்ற வரத்தினாலும் தன்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினான். தேவர்களும் சிவனிடம் சென்று முறையிட்டு, தங்களைக் காக்கும்படி கேட்டுக்கொண்டனர். சிவபெருமானும் அண்டகாசுரனுடன் கடும் போரிட்டார்.
அப்போது அவர் முகத்திலிருந்து வியர்வைத் துளிகள் கீழே பூமியில் விழ, அந்தத் துளியிலிருந்து ஒரு பூதம் போல் பெரிய மனித உருவம் தோன்றியது. தோன்றியபோதே 'பசி பசி' என்று அலைந்தது. அப்போது சிவபெருமான், அண்டகாசுரனைக் கொன்று, அவனைக் கீழே போட்டார். பின் அந்த உடலைத் தின்று பசியாற்றிக்கொள்ளும்படி சொன்னார். அதைத் தின்றபின்னும் அந்த உருவம் 'பசி' என்று அலைந்து, தேவலோகத்தில் புகுந்து தொந்தரவு செய்தது. அதனின் தொந்தரவு தாங்காமல் அதனைக் கீழே தள்ளி, குப்புறப் படுக்க வைத்து, அதன் மேல் 53 தேவதைகள் அமர்ந்தனர்; துன்புறுத்தினர்; அந்த உருவமும் பிரும்மாவை வேண்டித் தன்னைக் காக்கும்படி சொன்னது.
பிரும்மாவும் அதன் முன் தோன்றிக் காத்தருளினார். பின் அந்த உருவத்திற்கும் ஒரு பதவி அளித்தார். அதாவது புதுக் கட்டடம், கட்டுபவர் உனக்குப் பூஜை செய்து படையல் படைத்த பின்தான் வீடு கட்டத் தொடங்க வேண்டும் என்றார்.
"அப்படி செய்யவில்லை என்றால் நான் அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பேன்" என்றது அந்த மனித உருவம். பிரும்மாவும் அதற்குச் சம்மதித்து அதன் பெயரை வாஸ்து புருஷன் என்று வைத்தார்.
வாஸ்து புருஷன் வருடத்தில் எட்டு நாட்கள் தான் விழித்திருப்பார்; மற்ற நாட்களில் தூங்குவதாகச் சொல்லப்படுகிறது. அந்த எட்டு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம்தான் விழித்திருப்பார். அதில் முதலில் விழித்தவுடன் காலைக் கடன் செய்வார்; பின் குளித்து வருவார்; பின் பூஜை செய்வார்; அதற்குப் பிறகு போஜனம்; போஜனத்திற்குப் பின் தாம்பூலம் போடுவார். இப்போது அவர் தாம்பூலம் போடும் நேரத்தில் வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்ய, வீடு மளமளவென்று ஏறி, ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடிவடையும்.
வாஸ்து புருஷனைக் கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்பது. இது சதுரமாக இருக்கும். பிரும்மா வாஸ்துவைக் காப்பாற்றியதால் வீட்டின் நடுப் பாகம் பிரும்மாவுக்காகக் கொடுக்கப்பட்டு, அதற்கு பிரும்மஸ்தானம் என்ற பெயரும் சூட்டப்பட்டது.
வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள்:
சித்திரை 10ஆம் தேதி
வைகாசி 21ஆம் தேதி
ஆடி 11ஆம் தேதி
ஆவணி 6ஆம் தேதி
ஐப்பசி 11ஆம் தேதி
கார்த்திகை 8ஆம் தேதி
தை 12ஆம் தேதி
மாசி 22ஆம் தேதி
வாஸ்து தினமும் தூங்கும் போது அசைந்து அசைந்து, ஒரு இடம் இல்லாமல் மாறுகிறார். இதனால் சில மாதங்களில் அவர் படுக்கும் திசை மாறிவிடுகிறது.
இரவில் 12இலிருந்து 3 வரை கிழக்கை நோக்கி இருக்கிறார்
காலை 3இலிருந்து 6 வரை தெற்கை நோக்கி இருக்கிறார்
காலை 6 முதல் 9 வரை மேற்கில் இருக்கிறார்
காலை 9 முதல் 12 வரை வடக்கில் இருக்கிறார்
வாஸ்து பூஜை சரியாகச் செய்தபின் கட்டடம் கட்ட ஆரம்பிக்க, எல்லாம் நலம் தான்.
‘வாஸ்து புருஷன்’ என்பவர் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட திசையில் சிரசு வைத்திருப்பார், கால் வைத்திருப்பார் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியை மையமாக வைத்தே வாஸ்து புருஷன் கணிக்கப்படுகிறது.
சூரியன் உதிக்கும் திசை, மறையும் திசை, உத்ராயணம், தட்ஷிணாயனம் ஆகியவையும் வாஸ்து புருஷன் குறித்த கணிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கும் பாவனை இயக்கம் என்ற கணிப்பு மேற்கொள்ளப்படும். ஜாதகம் எழுதும் போது கூட சிலர் இராசி, நவாம்சம் ஆகியவற்றுடன் பாவனை இயக்கத்தையும் கணித்துக் கூறுவர்.
வாஸ்துவில் ‘வாஸ்து புருஷன்’ என்பது கூற பாவனை இயக்கத்தைப் போன்றதே. இயற்கையை ஒன்றி வாஸ்து புருஷன் கணிக்கப்பட்டுள்ளதால், அதை வைத்து வீடு கட்டும் போது சில செயல்களைச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வாஸ்து புருஷனைப் பின்பற்றி குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்ளும் போது இயற்கையின் ஒத்துழைப்புடன் வீட்டை கட்டி முடிக்க முடியும். இடையூறுகள் ஏற்படாது.
வாஸ்து புருசன்
வாஸ்து புருசன் இடது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை. குறிப்பிட்ட எட்டு மாதங்களில் விழித்திருப்பார். அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார். அதில் 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில்தான் (36 நிமிடம்) வாஸ்து செய்வது சிறந்தது என்கிறார்கள்.
வாஸ்து புருசன் பணிகள்
வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரங்களில் அவர் செய்யக்கூடிய பணிகள்
பல் துலக்குகிறார்.
நீராடுகிறார்
பூஜை செய்கிறார்
உணவு உண்கிறார்
தாம்பூலம் தரிக்கிறார்.
இதில் கடைசி 36 நிமிடங்களில் வாஸ்து செய்தால் வீடு சிறப்புடன் நிலைத்து நிற்கும்
வாஸ்து நேரம்
வாஸ்து வருடத்தில் எட்டு மாதங்களில் கீழ்காணும் அட்டவணைப்படி உள்ள நாள், நேரத்தில் வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் வாஸ்து நேரம் எனப்படுகிறது.
வ,எண் மாதம் நாள் நேரம்
1.சித்திரை10 காலை மணி 8.54 முதல் 9.30 வரை
2.வைகாசி21காலை மணி 10.06 முதல் 10.42 வரை
3.ஆடி 11காலை மணி 7.42 முதல் 8.18 வரை
4.ஆவணி 6 பகல் மணி 3.18 முதல் 3.54 வரை
5.ஐப்பசி 11 காலை மணி 7.42 முதல் 8.18 வரை
6.கார்த்திகை 8 காலை மணி 10.54 முதல் 11.30 வரை
7.தை 12 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
8.மாசி 22 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருக்கும் மாதங்கள் எதுஎது?
வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார். எனவே அவர் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது
தொகுப்பு.
சேந்தமங்கலம்
மோ.கணேசசிவம்
9443481300
ஓர் நண்பரின் வாஸ்து
பதிவில் இருந்து
வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் :
ஆதிகால கலையாகிய வாஸ்து ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று. வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது. வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விரண்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி.
இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்
ஆதி இந்தியாவின் அரும் பெரும் பொக்கிஷங்களில் வாஸ்து சாஸ்திரம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. அது வேதங்களின்று வெளிப்பட்டு உருவாக்கப்பட்டது. வேதாந்த தத்துவங்களில் வேரூன்றிய வாஸ்து எனும் வார்த்தையின் பொருள் வசிக்க என்பது பாஸ்து சாஸ்திரம் என்பது திட்டமிட்டு செய்து உருவகம் செய்தும் வீடு கட்டி உதவும் புனிதமான ஆழந்த அறிவு. (விஞ்ஞானம்) வீடு -Cosmos (micro-macro cosm) இவற்றின் இடையே நடுநிலை நிறுத்தி செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்க வல்லது. உடல் நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணவில் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை நிறுத்தி செயல் படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்கவல்லது. உடல்நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணர்வாலும், உடற்பயிற்சியாலும் மட்டும் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை இயக்கத்திலிருந்து உடல் தூக்கி எறியப்பட்டு நோயைத் தூண்டுகிறது. உடலில் உள்ள நாடிகள் ஆராய்ந்து அறிய சிரமமான பிராணா ஒழுங்காக இயங்க வாஸ்து வழிவகுக்கிறது. நல்ல உடல்நலமும், செல்வமும், ஆனந்தமும் அருளுகிறது. வாஸ்து சாஸ்திர அறிவை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து துன்பமும், ஏமாற்றமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
வாஸ்துவின் தொடக்கம்
உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition)
வாஸ்து பகவான் உருவான வரலாறு
வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.
வாஸ்துவின் கொள்கைகள்
புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது. 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று. கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது. வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன. ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது. நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது. வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன. நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை. சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது (Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது. அறியாமையும், இருளையும் குறிக்கிறது. துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது. தெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது. (எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்.
விசை Cosmic Forcesன் தூண்டுதல்கள்
Cosmic Forces எவை? வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது Tangible that can be touched or real prealent = wide spread, predominant எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி) அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத் விவரிக்கிறது. அது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது. வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது. அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது. ஆகவே புருஷன் Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும், பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது. வாஸ்துபடி அவை எல்லாம் Macro and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது. இந்த (Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன் செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது.
சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun)
பூமியில் வாழும்¢ எல்லா உயிர்களுக்கும் சூரியன் ஷிஷீuக்ஷீநீமீ ஆக உள்ளது. கடவுளை ஒத்த உருவம் உடையவன் மனிதன். காலை சூரியன் Ultraviolett கதிகளை வீசுகிறது. அது பகலின் மற்ற நேரத்தைக் காட்டிலும் அதிக ஒளியும் குறைந்த சூடும் உள்ளது. அது கிருமிகளை அழிக்கிறது. வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. சூரியன் கிழ்திசைக் கடவுள், வீட்டின் வடகிழக்கு Quarterல் வசிக்கிறார். சூரியன் மேற்கில் நகருகிறபோது சூடு அதிகமாகிறது. அதிக இன்ப்ராரெட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு தீமை விளைவிக்கூடியது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும், கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும். அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர் தடையின்றி வீட்டினுள் வீசும். இதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும் இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக உபயோகப்படுகிறது. காரணம் The Sun also represents the inner or true self. The Influence of the moon and the planets பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர். அவற்றின் இருப்பிடம் ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீது Subtle yet profound influence அறியமுடியாத ஆனால் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன என்பதை அறிந்திருந்தனர். ஒவ்வொரு கிரஹமும் வாழும் உயிராகவும், பயப்படக்கூடிய தோற்றமாகவும், திருப்தி அடைந்தால் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில் உயர்வும், சுகமான வாழ்வுக்கு உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன. 1. சந்திரன் உயிர்கொடுக்கும் சக்தி. மிஸீstவீஸீநீtவீஸ்மீ ணீநீtவீஷீஸீமீக்ஷீtவீமீs, suதீநீஷீஸீsநீவீஷீus இரண்டுக்கும் அரசன். பொலிவும், புத்துணர்வும் அளிக்கும் இடமான குறியல் அறை சந்திரனால் ஆளப்படுகிறது. அவனது (சந்திரன்) நிறம், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை. 2. யிuஜீவீtமீக்ஷீ (குரு) : அஞ்ஞானம் அகற்றுபவர், அறிவு, கல்வி, ஞானம் அளிப்பவர். தேவர்களுக்கு ஆசிரியர், கல்வி அல்லது நூலகத்தில் வாழ்பவர். அறிவைத் தூண்டும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். ஆபரணம், பணம் மற்றும் அதிக மதிப்புள்ள சொத்துக்களைக் காப்பவர். இவர் வீட்டின் வடதிசையில் அல்லது வடக்கில் உள்ள அறையில் வைக்கப்பட வேண்டியவர். 3. விமீக்ஷீநீuக்ஷீஹ் (புதன்) : சிறிய கிரஹம். சூரியனுக்கு அருகில் உள்ளவர் விரைவில் சுழல்வது. மாற்றக்கூடியவைகளுக்கும் ஓய்வு அற்றவைகளுக்கும் தூதுவர். சமஸ்கிருதத்தில் அவர் பெயர், புத்தி என்னும் சொல்லிலிருந்து வந்த பெயரே புதன். முக்கிய ஆலோசனை நடத்தப்படும் இடமான அமரும் அறை அல்லது உணவு உண்ணும் அறை போன்ற பொது இடத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். 4. க்ஷிமீஸீus (சுக்கிரன்) : ஆகாயத்தில் ஒளி வீசும் வெளிச்சம் உள்ள கிரஹம் மனிதனின் இயற்கையான கொண்டாட்டம், அன்பு பொறுமை, அழகுக்கலை போன்ற ஆபரணம் உடுத்தும் அறையிலும், படுக்கை அறையிலும் சுக்கிரனின் தூண்டுதல்கள் இருக்கும். பிடித்த நிறம் வெளிர் நீலம், பிங்க், வெளிர் மஞ்சள். ரிuழீணீ ஷீக்ஷீ விணீக்ஷீs: சிகப்பு கிரஹம் நெருப்பு போர் இவற்றுடன் தொடர்புடையது. நிரந்தரமற்றது. அழிக்கும் இயல்புடையது. தென்கிழக்கு மூலை (அக்னி)யில் வாசம் செய்பவர் விவாதத்திற்கு எதிராகக் காப்பவர். அவருக்கு உகந்த இடம் சமையல் அறை. ஷிணீtuக்ஷீஸீ (சனி) சட்டமும் வரையறுத்தலுக்குமுள்ள கிரஹம், பூமிக்கு வெகு தொலைவில் உள்ளது. மிகவும் மெதுவாக மாறுவது, கரிய நிறம் கொண்டது. வீட்டின் இருண்ட இடமான அலமாரிகள், பூமிக்க கீழ் உள்ள தளம் (கீழ்தளம்) வாசம் செய்வது. பூமியின் செயல்பாடுகள் Influence வாஸ்துப்படி சச்தியுள்ள அலைகள் பூமியின் மீது வலைபோல் பின்னிக் கொண்டு இருக்கிறது. மின்காந்த வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரியன் பிரயாணம் செய்யும் பாதையில் உள்ளது. நான்கு பெரும் திசைகாட்டி, திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ரேகைகள் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றன. சராசரியாக 15 டிகிரி அடைவதற்கு பூமியின் அச்சு 23.5 டிகிரி கோணத்திலிருந்து 360 டிகிரி ஆக முன்னோர்கள் பிரித்தனர். ஆகையால் முக்கிய திசைகளின் 90 டிகிரி யின் மூலைகளிலிருந்து 15 டிகிரி கோணம் எடுக்கப்பட்டு மொத்தமாக 30 டிகிரி போக 60 டிகிரி விடப்பட்டது. ஆகையால் முக்கிய திசைகள் 60 டிகிரி உள்ளதாக கணக்கிடப்பட்டது- ஒவ்வொரு திசைகளின் விகிதங்களை கணக்கிட்டு, இடத்தின் எந்த ஒரு பகுதியிலும் பல திசைகளின் செயல்பாடுகளை முன்னோர்கள் கணக்கிட முடிந்தது. நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டடால் ஒரு வீடு, நன்மை செய்யும் எல்லா இயற்கை சக்திகளையும் ஈர்க்கிறது. நன்மையும், மன திருப்தியும் வீட்டில் வாழ்பவருக்கு உறுதியாக அளிக்கிறது. இயற்கையாகவே அந்த வீடு வையகத்தின் ஒரு பிரிவாக பின்னிப் பிணைக்கப்பட்டு அத்துடன் ஒன்றி சகல நன்மைகளுடன் ஆனந்தமாக அதிர்வில் அசைந்தாடுகிறது. Vibration (அதிர்வு): பூமியின் மின்காந்த அலை முடிவாக எல்லா கிரஹங்களுக்கம் நன்மை அளிக்கிறது. முழு பூமி கிருஹத்துக்கு சக்தி செயல்பாடுகள் போல சதுர, செவ்வக வடிவில் உள்ள வீட்டு மனைகளும், கட்டடங்களும் காண்பிக்கின்றன.
காந்த சக்தியின் செயல்பாடுகள் Influence of Magnetic Forces
பண்டைய மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல், மனது இவற்றை பாதிக்கம் எளிதில் அறிய முடியாத அதிர்வின் அளவையும் அறிந்திருந்தார்கள். காரணம் மனித உடலும், மின் காந்த துண்டு போன்ற குணங்கள் உடையது. மனிதன் தலையை வடதிசை வைத்து உறங்கும்போது வித்தியாசமான இரு துருவங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதால் தூக்கம் கெடுகிறது. ஆதலால் வடதிசை தலைவைத்து உறங்குவது கூடாது என்று வாஸ்து கூறுகிறது. ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை உள்ள தலை உச்சி வழியாக, அறிய முடியாத மின்காந்த சக்தி பரவுகிறது. இது தண்டு வடம் வழியாக கீழே உள்ள எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும். பூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது. காலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது. அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள். வடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது. வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்தியை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே.
இருக்குமிடம் Orientation
வாஸ்துவில் இருப்பிடம் முக்கியத்துவம் உடையது. வீட்டு வழியாக சக்தி நகர வழி கொடுக்கிறது. உள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக வீட்டில் வழி செய்கிறது. பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவது ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது. (Ideally Balanced)) என்பதை முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வீட்டு மனையைப் பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிட வேண்டும். வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana) வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது. இது தென்மேற்கு திசைக்கு நகருமுன் ஏற்படுகிறது. கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது.
கோடுகளும், திசைகளும் Lines and Directions
முன் சொல்லப்பட்டது போல சதுரம் பூமியைக் குறிக்கிறது. கிழக்கு&மேற்கு, வடக்கு&தெற்கு திசைகள் அவற்றின் சந்திப்பான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கிறது. இருப்பிடமும் அதன் திசையும் வாஸ்துவின் இரு முக்கிய கொள்கைகள். வாஸ்துப்படி வடக்கு&தெற்கு கோடு நெருப்புக்கோடு & அக்னி ரேகை மேல் நோக்கு திசையுடையது. அது வையகத்தின் முதுகு எலும்பு போன்றது. கிழக்கு&மேற்கு கோடு தண்ணீர் கோடு. விரிவடையும் உணர்வோடு நிலையாக சமநிலையில் உள்ளது. வடகிழக்கு&தென்மேற்கு திசைகள் காற்றுக்கோடு விணீக்ஷீutணீ வேகமான நகருவதற்கு உதவுகிறது. இந்தக் கோடுகள் ஒரு குறுக்குப் புள்ளியில் சந்திக்கிறது. இது (பிரம்மாகுறி) (பிரம்மஸ்தானம்) கருப்பை என அழைக்கப்படுகிறது. இது உருவங்களின் முழுத்தோற்றங்களையும் பிறக்க வைக்கிறது. எட்டுதிக்குகள் பயனுள்ள சக்தியளிக்கும் திசைகள் கடவுள் உருவில் காக்கும் தேவதைகளாக நம் முன்னோர்களால் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேவதையும் தனித்தன்மை மிக்கது. மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கிறது. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்கு ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு. செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்க ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு, செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு சொந்தமானது. ஒவ்வொரு மூலைக்கும், தனி குணமும் தனி தேவதையும் உண்டு. வடகிழக்கு தேவதை ஈசானியன் தேவர்களில் இனியவர். காரணம் வடகிழக்கிலிருந்து தான் காஸ்மிக் எனர்ஜி இயற்கையாகவே பாய்கிறது. நெருப்பு தேவதை அக்னி வீட்டிலுள்ள பெண்களின் உடல் நலம் காப்பவர். இவர் தென்கிழக்கு மூலையின் அதிபதி. சுபகாரியங்களுக்கு உரியவர். (கன்னி) நிருதி அழிக்கும் பெண் தெய்வ அரக்கர்களின் தெய்வம். தென்மேற்கு மூலையின் அதிபதி. இவர் தலைவன், தலைமகள் அதிகாரம், உடல் ஆரோக்யம் வருமானம் இவைகளுக்கு அதிபதி. காற்று தேவதை வாயு வடமேற்கு மூலையின் அதிபதி. இவர் உடல்நலம், முன்னேற்றம் போன்றவைகளுக்கு அதிபதி. வருணன் மழைக்கு அதிபதியானவர் என கூறுகிறது. இந்திரன், இளம் வயதினர்க அதிபதியானவர். எமன், உயிர் உடலுக்கு அதிபதியானவர். குபேரன், செல்வத்திற்கு அதிபதியானவர். இந்த தேவதைகளின் செயல்பாடுகள் அவைகள் ஆளும் மூலையின் உடல் உள்ளம் இவற்றின் குணங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
பஞ்சபூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவைகள் ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும்.
ஆகாயம்
மற்ற நான்கு பூதங்களும் தடையின்றி சுழல்வதற்கு உதவுகிறது. மனிதனி¢ன் கேட்கும் திறமையும் இதைப் பொறுத்தே உள்ளது. இனிய, மென்மையான ஒலிக்கின்ற அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஆகாயம் ஆட்சி புரிகிறது. நன்மைகளை ஊக்குவிக்கும் காஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கம் தியானம், யோகா செய்வதற்கும் கல்வி, நற்காரியங்களுக்கும் வடகிழக்கு திசை தலைசிறந்தது.
வாயு
வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு அக்னியுடன் கூட்டுறவு கொண்டது. காரணம் காற்று நெருப்பை ஊக்குவிக்கும். இவ்விரண்டு பூதங்களும் சதா அசைந்து கொண்டிருக்கும் குணம் உடையவை. மனித உடலைத் தொடும் உணர்வினால் அறியப்படுகிறது. ஆதலால் அழகிய தோற்றமும், பொலிவும் நல்ல காற்றோட்டமும் மிகுந்த வீடுகள் அமைத்தல் நல்லது. வீட்டின் வடமேற்கு பகுதியின் ஸ்தானதிபதி ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்.
நெருப்பு அல்லது அக்னி
பஞ்சபூதங்களில் மிக முக்கியமானது. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. மனிதனின் பார்வைக்க தொடர்புடையது. வீட்டினில வெளிச்சம் பற்பல வண்ணங்கள் தட்பவெப்பநிலை மிக முக்கியமான அம்சங்கள் நெருப்பு முக்கோணமான வடிவில் உள்ள வீட்டுமனையை தவிர்க்க வேண்டும். அது விரும்பி வேண்டாத நெருப்பை தூண்டும். வீட்டின் தென்கிழக்கு பாகம் நெருப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சமையல் அறைக்கு உகந்த இடம் அக்னி. நமது ஜீரண உறுப்புகளோடும் சம்பந்தப்பட்டது. ஆதலால் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமைக்கப்பட்டது. உணவு, உடல் நலம் காக்கும் என்பதன் உறுதி செய்கிறது.
நீர்
நீர். திரவ லநயில் உள்ளதால் ஓயாது அசைந்து கொண்டே இருக்கும். அது வட்டத்தால் குறிப்பிடப்படுகிறது. வட்டவடிவமான கட்டம் ஓய்வு அற்ற நிலையின் உணர்வை உண்டாக்குகிறது. உதாரணம் (பார்லிமென்ட் கட்டடம்&டெல்லி) இது சுவை நீரைக் குறிக்கிறது. வாசனை அறியும் உணர்வுடன் தொடர்வுடையது. வீட்டில் தண்ணீர் குழாய் பாதையையும் ஒளி பிரதிபலிக்-கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடியின் மேல்மட்டம். முலாம் பூசாத கண்ணாடியின் மேல்மட்டத்தையும் குறிப்பிடுகிறது. வடமேற்க பாகம் குளியல் அறை, விருந்தினர் அறை அமைக்க மிகச் சிறந்த இடம். இங்கு பலதரப்பட்ட ஜனங்கள் அதிக நாள் தங்காது வந்து போகும் வாய்ப்பு உள்ளது.
பூமி
நிலம் அமைப்பின் குணத்தை குறிப்பிடுகிறது. பூமியின் மீதுள்ள நீர், நெருப்பு, காற்று இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து வாசனை அறியும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மணமும், நல்ல மணம் பரப்பும் (அரோமஸ்) மிகுந்த அளவில் வீட்டில் இருக்க வேண்டும். தென்மேற்கு (மூலை) பாகம் பூமியால் ஆளப்படுகிறது. பூமியின் ஒத்துப் போகும் குணம் அதிக எடை தாங்கும் குணம் உடையது. மதிப்பு மிகு மரச்சாமான்களும், சேமிப்பு அலமாரிகளும் வைக்க மிகவும் சிறந்த இடம் தென்மேற்கு. இந்த (ஐந்து) பஞ்சபூதங்களும் ஒன்றையொன்று அனைத்து செல்லும்போது முழுசக்தியின் தோற்றம் உருவாகிறது. இது வாஸ்து புருஷ மண்டலம் என அழைக்கப்படுகிறது. இது அளிவின் அடிப்படையில் கருதாது ஒவ்வொரு பூதங்களும் செயல்படும் பங்கு அளவின் விகித அடிப்படையில் அறிந்துகொண்ண வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பாகத்தில் பல அடுக்கு சக்திகளின் செயல்பாடுகளைக் குறிக்கிறது.
வாஸ்து புருஷ மண்டலம்
கட்டடமோ அல்லது ஒரு அறையோ வரைபடம் இல்லாமல் கட்டக்கூடாது. வாஸ்துவில் உபயோகப்படும் வரைப்படம் (வீட்டு பிளான் வாஸ் புருஷ மண்டலம் என்பது இது ஒரு தனிமனிதன் வடகிழக்கு&தென்மேற்கு வட்டத்தில் முகம் பூமியைப் பார்க்கும் நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையை குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் காஸ்மிக் சக்தி செயலாற்றும் உருவைக் குறிக்கிறது. வாஸ்து புருஷ மண்டலம் கோயில், வீடு, கட்டடம் திட்டமிட வழிவகுக்கிறது. இது மைக்ரோகோசம் (Microcosm) மைக்ரோ கோசத்துடன் சரியாக அமையவும், சூரிய ஒளி பரவுதலால் அதிக நன்மை அடையவும் உதவுகிறது. கட்டடம் உருவம் பெரியது. சிறியதுவாக இருக்க வேண்டுமெனும் கட்டுப்பாடில்லை. இது தனிக்கட்டடங்கள் திட்டமிடவும் முழு அளவில் பெரிய நகரம் திட்டமிடவும் உதவுகிறது. இடங்களின் அமைப்பு, ஒரு கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியின் விகிதாச்சாரம் அது கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் எல்லாம் வாஸ்து சொல்கிறது. மண்டலத்தின் வரைப்படத்திலிருந்து எந்த ஒரு வாழ்கின்ற, இயங்குகின்ற நிலையையும் சரியாக அமைக்கிறது. மண்டலம் ஒரு சதுரமாக இருப்பது. இது பூமியின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் திசை காட்டியின் எட்டுதிசைகளைக் குறிக்கிறது. ஒரு கட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு பாகத்திற்கும் அதி முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டின் சில குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இவை வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பகங்கள், நாபிக்கமலம்(தொப்புள்) போன்றவற்றை குறிக்கிறது. இந்த பாகங்களுக்-கு எந்த ஒரு தொந்தரவுமின்றி, இடருமின்றி அமையும் படிச் செய்ய வேண்டும். அதிக எடையோ அல்லது அதிக கல்கட்டு வேலையோ மேற்கூறிய பாகங்களில் இருக்கக்கூடாது. உதாரணமாக, வாஸ்து புரு-ஷனின் தலையாகிய வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைக்கக்கூடாது. இது வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி நோயைத் தரும். வாஸ்து புருஷனின் முகம் பூமியைப் பார்த்து இருப்பது ஆரம்ப நிலையாக இருந்தபோதிலும், அது வேறு இரு உடல்களை உடையது. ஒன்று நித்ய வாஸ்து என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒருமுறை கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. மற்றது சரவாஸ்து கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாதங்கள் ஒய்வெடுத்து பிறகு சுற்றுகிறது. பூமியின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்த அசைவு ஏற்படுகின்றது. சூரியன் பூமியின் அரை கோளத்திலிருந்து தென் அரை கோளத்திற்கு நகரும்போது வீட்டுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம் (காற்று வீசும் திசை கூட) போன்றவை மாறுகிறது. சில காலநிலை மாற்றம் குறிப்பிட்ட திசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பிட்ட திசையில் உள்ள வீட்டில் காலநிலைக்கேற்ப ஜன்னல் கதவை திறந்து வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் நமக்கு நலன் அளிக்க வல்லது.
முன்னோர்களின் காரணம் அறிந்து காரியம் செய்யும் முறை The Logic of the Amients
ஒருநாளில் ஒவ்வொரு நேரத்தின் இயல்புக்கேற்ற மனதும், உடலும் பலவிதமான வேலைகளைச் செய்கின்றது என்பதனை ஆதி மனிதர்கள் அளிந்திருந்தனர். பூமியின் குழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்றப்படி மனிதனின் இயக்கத்தில் மாற்றம் நடப்பதும் நன்கு அறிந்து, அதன்படி சூரியனால், மனிதனுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டின் ஒவ்வொரு பாகங்களையும் நன்கு திட்டமிட்டு வீடு அமைத்தனர். 24 மணி நேரங்களை 8 பிரிவாகப் பிரித்தார்கள். எட்டு திசைகளை கருத்தில் கொண்டு இவ்விதம் செய்தனர். ஒவ்வொரு செயல்பாடுகளின் இயல்பு ஒவ்வொரு திசைகளின் குணங்களைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு ஏற்ப நன்கு அமையாத வீடுகள் அமைதியின்மை போன்ற இன்னல்களைத் தரும்.
நேரமும் செயல்களும் Time and Activity
அதிகாலை 2 மணி 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும் சிறந்த நேரம். காலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில் இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை கிழக்கு. காலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும் தண்ணீரால் ஈரமாக்கப்படும். காய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என அழைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம். சூரியன் தென்திசையில் உள்ளது. இது உறங்கும் அறைக்-குச் சிறந்த இடம். மாலை மணி 3லிருந்து 6 வரை, படிக்க வேலை செய்ய சிறந்த நேரம். இப்போது சூரியன் வீட்டின் தென்மேற்கு பாகத்தில் உள்ளது. படிக்கவும் நூலகம் வைக்கவும் சிறந்த இடம். மாலை 6லிருந்து 9 வரை உண்ணவும், உட்காரவும், படிக்கவும் உகந்த நேரம் வீட்டின் மேற்கு பாகம் உண்ணவும், உட்காரவும் உகந்த இடம். மாலை 2 மணி 9லிருந்து நள்ளிரவு வரை. சூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் உள்ளது. மாட்டுக் கொட்டகைக்கு ஏற்ற இடம். ஆடு, மாடு போன்றவற்றை கவனிக்க சிறந்த நேரம். வடமேற்கு பாகம் உறங்கும் அறை அமைக்க சிறந்த இடம். நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி 3 மணி வரை சூரியன் வீட்டின் வடபாகத்தில் உள்ளது. இது இருண்ட நேரம் ரகசியத்திற்கு உரிய நேரம். விலைமதிப்புள்ள ஆபரணங்கள், பணம், போன்றவற்றை காப்பாற்றி மறைத்து வைக்க வீட்டின் வடக்கு பாகம் சிறந்த இடம்.
வீட்டுமனை தேர்வு
வடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம் செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை. முக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன் தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல. செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல செயல்திறன் மிக்கது. சக்திமிகு அமைப்பு உடையது. இது வியாபார ஸ்தலம் அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது. வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். (Activity) (Sports Club GYM) போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல. ஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல. வடகிழக்கு மூலை நீண்டிருந்தால் ஒழிய, அதன் மூலை 90 கோணத்திலிருந்து மாறுபடுகிறதோ Either of Long or Rhombus அது ஒதுங்கற்ற வடிவமுள்ள கட்டடம் அல்லது அறையாக கருதப்படுகிறது. மனை மட்டம் சமமாக இருக்க வேண்டும். நடுவில் உயர்ந்து ஆமையின் முகுதுபோல் வளைந்தோ அல்லது நடுமனை உள்வளையாக குழிந்தோ இருக்கக்கூடாது. Inclinical மனை பரவாயில்லை. மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும் இது நல்லது. ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம். வடக்கு கிழக்கு வடகிழக்கில் இருக்கக்கூடாது. இது நல்லதும், செல்வமும், அருளும், சூரிய ஒளி வடக்கிழக்கிலிருந்து வருவதையும் தடுக்கும். தண்ணீர் இயற்கையாகவே அருகில் இருப்பது நல்லது. தெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது. மயானமாக இருந்த இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும் வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இவை நம் இடத்தில் இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை

Comments
Post a Comment