ஸ்ரீ விநாயகர் ஸ்தப்கம்

 ஸ்ரீ விநாயகர் ஸ்தப்கம்



குருவே பரமன் கொழுந்தே பணிந்தன் 

குவலயம் போற்றும் கணநாதா ! 

வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய் 

வடிவேலனின் சோதரனே ! 

அருள்வாய் ! உனையே அனுதினம் பணிவேன் 

அன்னை பராசக்தி அருள்மகனே ! 

திருமால் மருகா ! திருவடி சரணம் 

தினரஷகனே கணநாதா ! 


ஆனையின் அன்பன் அழகு முருகனின் 

அண்ணனாய் உலகில் அவதரித்தாய் 

ஆனைமுகத்தோடு ஐங்கரங் கொண்டதோர் 

அற்புத வடிவே கணநாதா ! 

யானென தென்னும் எண்ணங்கள் நீக்கி 

இகபரசுகமதை எனக்களிப்பாய் 

யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன் 

என்துயர் களைவாய் ! கணநாதா ! 


குஞ்சரனே எழிற் குஞ்சரிநாதனாம் 

குகசரவணபவ சோதரணே ! 

வெஞ்சமரெதிலும் வெற்றியே தருவாய் 

வேழமுகத்தோய் கணநாதா 

அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய் 

அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய் !

பஞ்சமி பைரவி பார்வத புத்திரி 

பார்வதி மைந்தா கணநாதா ! 


வல்லபை நாதா விக்ன விநாயகா 

வாழ்ததிப் பணிந்தேன் உன்பதமே 

வல்வினை எல்லாம் வலிமை இழந்தே 

வாடிடச் செய்வாய் கணநாதா 

தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன் 

துன்பமெல்லாம் நீ துடைத்திடுவாய் 

அல்லொடு பகலும் அனவரதும் உன் 

அடியினை தொழுவேன் கணநாதா ! 


வானொடு நீரும் வளியும் தீயும் 

வையகம் யாவும் உன் வடிவே ! 

மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய் 

மங்கலப் பொருளே கணநாதா 

தேனோடு பாலும் தொங்கொடு பழமும் 

தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்

ஊனொடு உயிரும் உயர்வும் புரப்பாய் 

உன்னடி தொழுதேன் கணநாதா ! 


ஓமெனும் வடிவே உன் வடிவாமென 

உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய் 

ஆம் எனச் சொல்வாய் அன்னை குமாரா 

ஆதரித்தருள்வாய் கணநாதா !

சுபம்.

Comments